கிளந்தான் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், பிகேஆர் கூறுகிறது

 

Nobudgingfromkelantanகிளந்தானில் பிகேஆர் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கிளந்தான் பிகேஆர் கூறுகிறது. பிகேஆர் போட்டியிட்ட அத்தொகுதிகளை அதனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பாஸ் கேட்டுக் கொண்டுயுள்ளது.

அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிடப் போவதாக சூளுரைத்துள்ளது.

பாஸ் என்ன வேண்டுமோ அதைச் செய்யலாம். ஆனால் பிகேஆர் 13 ஆவது பொதுத் தேர்தலில் அது போட்டியிட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அடுத்தப் பொதுத் தேர்தலிலும் போட்டியிடும் என்று பிகேஆரின் கிளந்தான் தலைவர் அப்து அசிஸ் காடிர் மலாசியாகினியிடம் கூறினார்.