நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய்: அதிர்ச்சி தரும் காரணம்

ஜிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு வயதில் குழந்தை ஒருவர் உள்ளார்.

இதை இரண்டாவதாக திருமணம் செய்த பெண் தான் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் திடீரென்று அக்குழந்தையின் கண்களை தாக்கி பிடுங்கியுள்ளார். இதனால் அக்குழந்தை இரத்தம் வழிந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அப்பெண் இரவு நேரத்தில் படுக்கையை ஈரம் செய்த காரணத்தினாலே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

அப்பெண் குழந்தையை தாக்கும் போது, குழந்தையின் தந்தை அருகில் இருந்ததாக கூறப்படுகிறது.மனிதாபிமானம் இன்றி இது போன்ற செயலில் ஒரு தாய் இருக்கும் இடத்தில் ஒரு பெண் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வயது குழந்தைகள் படுக்கையை ஈரம் செய்வது ஒன்றும் புதிதல்ல, 12ல் 1 குழந்தை படுக்கையை ஈரம் செய்யத்தான் செய்யும் என்று என்ஹச்எஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அக்குழந்தை ஒரு இடத்தில் இரத்தம் வழிந்த நிலையில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

-http://news.lankasri.com