ரஃபிஸி: 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்ற பாஸுக்கு நெருக்கமானவர் யார் என்று எம்எசிசிக்கு தெரியும்

 

RafizitellsAnnuarபிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதி பெற்ற பாஸ் கட்சிக்கு நெருக்கமான தனிப்பட்ட ஒருவர் யார் என்பதை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கூறிக்கொண்டார்.

அவர் கூறியிருப்பதின்படி, 1எம்டிபி பற்றிய விசாரணையை எம்எசிசி மேற்கொண்டிருந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

“அந்த விசாரணையிலிருந்து, பாஸ் தலைமைத்துவத்திற்கு நெருக்கமான ஒரு தனிப்பட்டவருக்கு நிதி சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது”, என்று அவர் இன்று காலை வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் கூறுகிறார்.

ஆகவே, தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை எம்எசிசியிடம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று ரஃபிஸி மேலும் கூறினார்.