சூராவுக்கு வெளியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பில் நால்வர் கைது

arrestநேற்று   ஜோகூரில்,  தாமான்  ஆஸ்டின்   பெர்டானாவில்    ஒரு   தொழுகை   இல்லத்துக்கு    முன்புறம்    ஒருவர்    தாக்கப்பட்டது    தொடர்பில்     விசாரணைக்காக    போலீசார்   நான்கு   ஆடவர்களைத்   தடுத்து    வைத்துள்ளனர்.

21க்கும்   55 வயதுக்குமிடைப்பட்ட    அவர்கள்   பின்னிரவு   மணி  1க்கு    அத்  தொழுகை   இல்லத்துக்கு  முன்புறம்   கைது    செய்யப்பட்டார்கள்.  கலகம்   செய்ததாக    குற்றவியல்    சட்டம்   பிரிவு   147-இன்கீழ்    அவர்கள்மீது   குற்றம்  பதிவாகியுள்ளது     என   ஜோகூர்   குற்றவியல்   புலனாய்வுத்   துறை   தலைவர்    கமருல்   ஸமான்  மாமாட்   கூறினார்.

வெள்ளிக்கிழமை   தொழுகையின்போது   சூராவ்    முன்புறம்    வாகனங்கள்   சாலையை    மறைத்துக்   கொண்டிருந்ததைக்   கண்ட    மோட்டாரோட்டி  ஒருவர்      கார்  ஹாரனை  அடித்ததால்   ஆத்திரமடைந்த  ஒரு  கும்பல்   அவரைத்   தாக்கியதாக    நம்பப்படுகிறது.    இச்சம்பவம்   முழுவதும்  படம்  பிடிக்கப்பட்டு    சமூக   வலைத்தளங்களில்    வலம்    வந்து   கொண்டிருக்கிறது.

அதைச்   சமூக   வலைத்தளங்களில்       பரப்புவதும்       விவாதிப்பதும்   நல்லதல்ல    என்றார்  கமருல்   ஸமான்.  அது  நிலைமையை    மேலும்  மோசமாக்கலாம்.