குவான்: சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்பது சரிதான்

dapபாஸ்   பிகேருடன்   உறவுகளை   முறித்துக்கொள்ள   முடிவு    செய்ததை   அடுத்து  சிலாங்கூர்   ஆட்சிக்குழுவில்   இடம்பெற்றுள்ள  மூன்று  பாஸ்    கட்சியினர்   விலக    வேண்டும்     என்று   கேட்டுக்கொள்வது   சரியான   முடிவுதான்    என்கிறார்   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்.

இதன்     தொடர்பில்    இதற்குமுன்    தாம்   கருத்துச்  சொன்னதில்லை    என்று   குறிப்பிட்ட   லிம்,  அம்மூவரையும்     பதவி   விலகுமாறு    சிலாங்கூர்    மந்திரி   புசார்   அஸ்மின்   அலியே    கேட்டுக்கொண்டிருப்பதாக      அறிவிக்கப்பட்டிருப்பதால்    “அதை    நான்  முழுமையாக    ஆதரிக்கிறேன்”  என்றார்.

அஸ்மின்   மாநில   ஆட்சிக்குழுவிலிருந்து   விலக  வேண்டும்    என   அம்மூவரிடமும்     வலியுறுத்தியிருப்பதாகக்  கூறும்  த  ஸ்டார்   செய்தி   குறித்து   கருத்துரைத்தபோது    லிம்   இவ்வாறு  கூறினார்.