முகைதின் மசூதியில் நிகழ்ச்சி நடத்துவதிலிருந்து தடுக்கப்பட்டார்

 

Muhyddinbanedபாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதின் யாசின் தங்காவில் ஒரு மசூதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டார்.

முகைதின் பெக்கான் குண்டாங் உலுவிலுள்ள மசூதியில் வரும் சனிக்கிழமை அரிசி மற்றும் இதர பங்களிப்புகளை அவரின் தொகுதியிலுள்ள மசூதி பிரதிநிதிகளுக்கு வழங்குவதாக இருந்தது.

ஆனால், அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு விட்டதாக தங்கா மாவட்ட காதியின் அலுவகம் முகைதினின் சேவை மையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

“இது ஓர் அரசியல் செராமா அல்ல. இது பொருட்களை வழங்குவதற்கானதாகும். அது மசூதி வளாகத்தில், மசூதிக்குள் அல்ல, நடத்தப்படவிருந்தது”, என்று தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறப்பட்டது.