துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பாதிரியார் கோவின் கடத்தல் பற்றிய தடயம் கிடைத்தது

 

Shootoutகள்ளக்கடத்தல் கும்பலோடு நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக பாரியார் ரேமண்ட் கோ கடத்தலுக்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டது.

கெடா, கம்போங் வெங் டாலத்தில் ஜூன் 17 இல் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. அதில், சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அக்கூட்டத்தைச் சேர்ந்த மூவரையும் கொல்லப்பட்டவரின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் பாதிரியாரின் வீடு என்று நம்பப்படும் ஒரு வீட்டின் படம், அவரது இரு கார்களின் படங்கள் மற்றும் எஸ்டி 5515 டி என்ற எண்ணைக் கொண்டு ஒரு வண்டியின் உரிமத் தட்டு ஆகியவை அடங்கும்.

பாதிரியாரின் கடத்தலில் இந்தக் கூட்டத்தினருக்கு தொடர்பு இருக்கிறது நம்புவதாக போலீஸார் கூறினர். கைது செய்யப்பட்ட நால்வரையும் கோலாலம்பூருக்கு கொண்டுவந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது என்று புக்கிட் அமானில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூறப்பட்டது.