வாக்காளர் பட்டியல் அழிக்கப்பட்டதா? மோசடி என்கிறது சிலாங்கூர்

elizabethதேர்தல்   ஆணையத்தைப்  பிரதிநிதிக்கும்    வழக்குரைஞர்கள்   1993,  2004   வாக்காளர்   பட்டியல்கள்    அழிக்கப்பட்டுவிட்டதாக   இன்று   நீதிமன்றத்தில்   தெரிவித்ததற்கு   சிலாங்கூர்    அரசு    கண்டனம்   தெரிவித்தது.

இன்று   நீதிமன்றத்தில்    அத்தகவல்    தெரிவிக்கப்பட்டதைக்   கேட்டு    வியப்படைவதாக   சிலாங்கூர்     ஆட்சிக்குழு    உறுப்பினர்    எலிசபெத்    வொங்   கூறினார்.

“நாங்கள்  (சிலாங்கூர்   அரசு)   அரசாங்க    ஆவணங்களை    அழிப்பதில்லை.  மெர்தேகா   காலத்திலிருந்து    ஆவணங்களைப்  பத்திரமாக   வைத்துள்ளோம்.  ஆனால்,  இன்று   இசி  சொல்வதைக்  கேட்க    வியப்பாக   உள்ளது”,   என்றார்.