ஜோகூரில் ஜிஇ14-இன்போது 8,000 போலீசாரும் தன்னார்வலர்களும் பணியில் இருப்பர்

ஜோகூர்   போலீஸ்,    விரைவில்   நடக்கும்   என்று  எதிர்பார்க்கப்படும்   14வது   பொதுத்   தேர்தல்   சீராக   நடைபெறுவதை   உறுதிப்படுத்த  8,000  பேரைப்  பணியில்  ஈடுபடுத்தும்.

அவர்களில்  500 பேர்   போலீஸ்   தன்னார்வலர்கள்   என   ஜோகூர்   போலீஸ்  துணைத்   தலைவர்   முகம்மட்  கமருடின்  முகம்மட்  டின்  கூறினார்.

“அவர்களுக்கு  எதிர்பாராத   நிலைமைகளைச்   சமாளிக்க   பயிற்சிகள்  வழங்கப்பட்டு   வருகின்றன.

“ஜோகூர்  “கடுமையான”  போட்டி   நடக்கும்  இடமாகத்   திகழும்   என   எதிர்பார்க்கிறோம்”,  என்றவர்  பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.