மாணவனை அறைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை நீதிமன்றம் விடுவித்தது

 

 

ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அஸிசான் மானாப் இன்று சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அஸிசான் இன்று காலை மணி 8.30 க்கு நீதிமன்றம் வந்து சேர்ந்தார்.

சுமார் 300 ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கத்தின் (என்யுடிபி) பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் இருந்ததாக ஹரியான் மெட்ரோ கூறுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவனின் தகாத செயல்களுக்காக அஸிசான் அவனைத் தண்டித்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் செக்சன் 323 இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரிம2,000 அபராதத்தை எதிர்கொண்டிருப்பார்.