மெர்சிங்கில் கோர நிலச் சரிவு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒருவர்

ஜாலான் ஜெமாலுவாங்-மெர்சிங் சாலையில்    60-வயது   ஆடவர்   ஒருவர்   காரோட்டிச்  சென்றபோது    நிலச்சரிவு ஏற்பட்டதால்   அவருடைய   கார்  பல  மீட்டர்    ஆழப்   பள்ளத்தில்   விழுந்தது.   அவ்வாடவர்   சொற்ப   காயங்களுடன் உயிர் தப்பினர்.

அச்சம்பவம்  குறித்த   தகவல்   அதிகாலை  மணி  2.30க்குக்  கிடைத்ததா   தீயணைப்பு,  மீட்புத்துறை    கூறிற்று.

விபத்தில்   சிக்கியவர்   மெர்சிங்   மருத்துவமனைக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.

அச்சாலை  இப்போது   போக்குவரத்துக்கு   மூடப்பட்டுள்ளதாகவும்    அப்பகுதியில்    பயணிக்க    விரும்பும்    பொதுமக்கள்   மாற்றுச்   சாலைகளைப்  பயன்படுத்த  வேண்டுமெனவும்   தீயணைப்பு,  மீட்புத்துறை    கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே,   வானிலை   ஆய்வுத்  துறை   ஜோகூரில்  பல   நாள்களுக்குக்  கனத்த  மழை  பெய்யும்   என    எச்சரித்துள்ளது.