நஜிப்: புரோட்டோன் மூழ்கிட விட்டுவிட மாட்டோம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் நசிந்து போக ஒருபோதும் இடம்கொடுக்கப் போவதில்லை என உறுதி கூறினார்.

“புரோட்டோன் நிர்வாகத்தில் நிறைய அரசியல் தலையீடு இருந்துவந்துள்ளது. ஆனால், புரோட்டோன் மூழ்கிட ஒருக்காலும் அனுமதியோம்.

“புரோட்டோன் மறைந்துபோகும்படி விட்டு விட மாட்டோம். அது மீட்சிபெற அரசாங்க ஆதரவும் உதவியும் தேவைப்படுகிறது.

“ டிஆர்பி-ஹைகோமும் புரோட்டோனும் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதை அரசாங்கமும் பிஎன்னும் உறுதிப்படுத்தும்”, என நஜிப் பேராக், தஞ்சோங் மாலிம் புரோட்டோன் நகரில் கூறினார்.

“நாங்கள் புரோட்டோனுக்கு உதவவில்லை என்று யாராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும்”, என்றார்.

அரசாங்கம் அந்நிறுவனத்துக்கு நிதி உதவிகளையும் குறைந்த வட்டியில் கடன்களையும் அளித்துவந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.