மசீச அதன் கேளாங் பாத்தா தலைவரை அத்தொகுதி வேட்பாளராக அறிவித்தது

கேளாங்  பாத்தா  மசீச   கிளைத்   தலைவர்  ஜேசன்  தியோ  14வது  பொதுத்   தேர்தலில்   அத்தொகுதி   வேட்பாளராகக்  களமிறக்கப்படுவார்  என   மசீச  துணைத்   தலைவர்  வீ  கா  சியோங்   கூறினார்.

டிஏபி  பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்கிடம்  பறிகொடுத்த   அத்தொகுதியை   மீட்பதற்கு  தியோவைவிட   சிறந்த   ஒருவர்  இருப்பதாக  மசீச  கருதவில்லை   என  வீ   கூறியதாக   த   ஸ்டார்   அறிவித்துள்ளது.

“அவர் (தியோ)  நன்கு  அறியப்பட்டவர்.  சீனர்கள்,  மலாய்க்காரர்கள்,  இந்தியர்கள்  என  கேளாங்   பாத்தாவில்   எல்லாராலும்  விரும்பப்படுகிறவர். எப்போது  தேவை  என்றாலும்  உடனே  வந்து  நிற்பார்”,  என  நேற்று  ஆயர்  ஈத்தாம்   எஸ்கேஜேசி  யோங்  பெங் 1-இல்  சீனப்  புத்தாண்டு   திறந்த  இல்ல  உபசரிப்பில்  வீ  கூறினார்.