இன்று பிரதமரின் ‘சிறப்பு அறிவிப்பு’ இல்லை

14வது  பொதுத்  தேர்தல்    எந்த  நேரத்திலும்  அறிவிக்கப்படலாம்    என்று   எதிர்பார்க்கப்படும்    வேளையில்   இன்று  பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்    “சிறப்பு    அறிவிப்பு”   ஒன்றைச்   செய்வார்   என்று  கூறும்   பழைய  காணொளி  ஒன்று  சமூக   வலைத்தளங்களில்    வலம்   வந்து  கொண்டிருக்கிறது.

அக்காணொளி  இன்று  “சிறப்பு   அறிவிப்பு”   செய்யப்படும்   என்று  கூறுவதை  வைத்து   நெடிசன்கள்  பலர்  நாடாளுமன்றம்  கலைக்கப்படுவதாக    ஆருடம்  கூறத்   தொடங்கி  விட்டனர்.

மலேசியாகினி  சரிபார்த்ததில்   அப்படி  எதுவும்   இன்று  நடக்கும்   என்று    தெரியவில்லை.  பிரதமர்   இன்று  அறிவிப்பு   எதுவும்   செய்யும்   திட்டம்   கிடையவே  கிடையாது  என்று  அவரின்  உதவியாளர்   மறுத்தார்.

இதனிடையே , அது     தனது   இணையத்தளத்திலிருந்து  உருவப்பட்ட  2013ஆம்   ஆண்டு  காணொளி  என்பதை ஆஸ்ட்ரோ  அவானி   உறுதிப்படுத்தியுள்ளது.