அரசாங்கத்திற்கு எதிரான முன்னாள் இராணுவ வீரர்களை பெர்லிஸ் எம்பி சாடினார்

 

மலேசிய இராணுவ சேவையிலிருந்து விலகியதும் சிலர், உயர்மட்டத்திலிருந்தவர்கள் உட்பட, அரசாங்கத்தை எதிர்ப்பது குறித்து பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலையை மேம்படுத்த அவர்கள் விரும்பினால் அவர்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கலாம், ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகப் போகக் கூடாது என்று ஒன்பதாவது ரோயல் ரேஞ்சர் ரெஜிமெண்ட் வாழ்க்கை நலம் மன்றத்தின் கூட்டத்தை இன்று கங்காரில் திறந்து வைத்து பேசுகையில் அவர் கூறினார்.

மந்திரி பெசாருடன் அம்மன்றத்தின் தலைவர் அப்துல் ரஹ்மானும் உடனிருந்தார்.