மரியா சின் நாடாளுமன்றத்திலும் சுயேச்சையாகத்தான் இருப்பார்

மரியா    சின்   அப்துல்லா   சமூக   அமைப்பு   ஒன்றிலிருந்து  விலகி  அரசியலில்   குதிக்க   முடிவு    செய்திருக்கலாம்.  14வது  பொதுத்   தேர்தலில்   போட்டியிடப்போகும்   அவர்   தேர்தலில்  வெற்றி   பெற்றாலும்   நாடாளுமன்றத்தில்   ஒரு   சுயேச்சை  உறுப்பினராகத்தான்    செயல்படுவார்.

பெர்சே   தலைவர்   பதவியிலிருந்து   விலகிய    மரியா  சின்  பக்கத்தான்   ஹரப்பான்   சார்பில்    தேர்தலில்   களமிறங்க    முன்வந்துள்ளார்.  ஆனால்,  எந்தவொரு    அரசியல்  கட்சியிலும்    சேரும்   எண்ணம்   அவருக்கு  இல்லை.

மக்களவையில்  “சீரமைப்புத்   திட்டங்களை”க்  கொண்டு   வரும்   திட்டத்தில்   கவனம்    செலுத்த    வேண்டியிருக்கும்    என்பதால்   கட்சி    அரசியல்    தமக்குச்   சரிப்பட்டு   வராது     என்றவர்   நினைக்கிறார்.

“சீரமைப்புத்   திட்டங்களைக்  கொண்டுவர    நான்   சுயேச்சையாக   இருப்பதே     நல்லது.

“எந்தக்  கட்சியிலும்  சேரப்போவதில்லை”,  என   இன்று  பெட்டாலிங்   ஜெயாவில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்    மரியா  சின்  கூறினார்