டெலிகோம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தடை

டெலிகோம்  மலேசியா   அதன்   ஊழியர்கள்  வாக்களிப்பு  மற்றும்  வாக்கு  எண்ணும்  முகவர்களாக(பாகா)  பணியாற்றத்   தடை  விதித்துள்ளது.

டெலிகோம்   அந்நிறுவனத்திலும்   அதன்   துணை   நிறுவனத்திலும்   பணியாற்றுவோருக்கு  மின்னஞ்சல்   வழியாக  அனுப்பிய  அறிக்கையில்   இதைத்    தெரிவித்துள்ளது.

“டெலிகோம்   பணியாளர்கள்   வக்களிப்பு   நிலையங்களில்     தேர்தல்   முகவர்களாக    செயல்படுவதற்கும்   மக்களவை  அல்லது  சட்டமன்றங்களுக்குப்  போட்டியிடும்   வேட்பாளர்களுக்காக   தேர்தல்   வேலைகள்    செய்வதற்கும்   தடை  விதிக்கப்பட்டுள்ளது”,  என்று   அந்த    அறிக்கை   கூறியது.