ஹரப்பான் தலைவர்கள் பத்து சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்

 

பத்து, கோலாலம்பூர் – ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்று தாமான் டத்தோ செனுவில் கூடி பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சுயேட்சை வேட்பாளர் பி. பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிக்க ஹரப்பானின் உயர்மட்ட தலைவர்கள் அங்கு கூடினர்.

பத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவாவின் வேட்பாளர் நியமனம் நிராகரிக்கப்பட்ட பின்னர், சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

புக்கிட் லன்ஜான் வேட்பாளர் எலிசபெத் வோங் “சாவி” சின்னத்திற்கு வாக்களித்து பிரபாகரனுக்கு ஆதரவு அளிக்குமாறு அங்கு கூடியிருந்த மக்களைக் கேட்டுக் கொண்டார்.

ஹரப்பான் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அங்கு வந்த சேர்ந்த போது கூட்டத்தினர் பெருத்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

பத்து வாக்காளர்கள் வாக்களிக்கையில் சாவி சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கூறிய அசிஸா, இதர தொகுதிகளில் இருப்பவர்கள் கண் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.