மகாதிர் அமைச்சரவையின் முதல் மூன்று அமைச்சர்கள்

 

பிரதமர் மகாதிரியின் புதிய அமைச்சரவையின் மூன்று உறுப்பினர்களை அவர் இன்று பெர்சத்துவின் தலைமையகத்தில் அறிவித்தார்.

டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் – நிதி அமைச்சர்.
அமனாவின் தலைவர் முகமட் சபு – தற்காப்பு அமைச்சர்.
பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் – உள்துறை அமைச்சர்.

இன்னும் ஏழு அமைச்சர்களின் பெயர்களை நாம் அறிவிக்கவில்லை என்று மகாதிர் கூறினார்.

பக்கத்தான் கூட்டணியின் நான்கு கட்சிகளில் ஒவ்வொன்றும் மூன்று பெயர்களை பிரதமரின் முடிவிற்காக தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் என்று மகாதிர் தெரிவித்தார்.

இன்று காலையில் தொடங்கிய பக்கத்தான் தலைமைத்துவ கூட்டத்திற்குப் பின்னர் பிற்பகல் மணி 3.30 அளவில் செய்தியாளர் கூட்டம் தொடங்கியது.