குவோக் இங்கே இருந்தார்; நஸ்ரி எங்கே காணாமல் போய் விட்டார்?, ரோபர்ட் பாங் கேட்கிறார்

 

மலேசியர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். ஹோங்கோங்கை அடித்தளமாகக் கொண்ட கோடீஸ்வர் ரோபர்ட் குவாக் தன் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆனால் அவரை கண்டபடி வசை பாடிய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று முன்னாள் எம்எசிசி ஆலோசகர் ரோபர்ட் பாங் கேட்கிறார்.

அந்த 95 வயதான வணிகரை சில அம்னோ முன்னாள் அமைச்சர்கள் “போன்டான்” மற்றும் “அது” இல்லாதவர் என்றும் தரக்குறைவாக பேசியிருந்ததை பாங் நினைவு கூர்ந்தார்.

மேலும், நஸ்ரி அவரை மலேசியாவுக்கு திரும்பி வரும்படி கோரினார். அவர் (ரோபர்ட் குவோக்) இங்கு சில நாள்களாக இருக்கிறார். ஆனால், நான் நஸ்ரி அவருக்குச் சவால் விடுவதைக் காணவில்லை என்றார் பாங்.

உமக்கு என்ன ஆயிற்று என்று மக்கள் தெரிந்த கொள்ள விரும்புகின்றனர். மற்றவர்களுக்கு சவால் விடும் தைரியம் இருப்பதாகக் காட்டிக் கொண்டீர். ஆனால் சரியான இடத்தில் அதைக் காட்டவில்லையே என்று பாங் மேலும் கூறினார்.

“நீர் என்ன ஒரு கோழையா அல்லது அதைச் செய்யாதற்கான சொந்தக் காரணம் ஏதும் உண்டா? தயவு செய்து அதை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் உங்களுடைய பதிலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்”, என்று ரோபர்ட் பாங் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.