நிதி அமைச்சர்: பிரிம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹரியாவுக்கு முன்னர் கொடுக்கப்படும்

 

1மலேசியா மக்களுக்கான உதவி (பிரிம்) அடுத்த மாதம், ஹரிராயா கொண்டாட்டத்திற்கு முன்பு, கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார்.

இது பிரதமர் மகாதிரின் கட்டளைப்படி செய்யப்படுகிறது என்று ஒரு டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.

அந்த பிரிம் உதவிக்கு வேறு பெயர் இடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் பிற தகவல்கள் அளிக்கப்படும்.

2018 ஆண்டில் இது இரண்டாவது முறையாக கொடுக்கப்பட விருக்கிறது. முதலாவதாக பிஎன் அரசாங்கத்தால் ரிம300 அல்லது ரிம400 அல்லது ரிம450 கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுக்கப்பட்டது.

14 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து “1மலேசியா” சுலோகம் மற்றும் அதனுடனான வாழ்த்துகள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் மகாதிர் உத்தரவிட்டார்.