பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போலீசார்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுக்குக்   கொலை   மிரட்டல்   விடுத்ததாக    ஐயுறப்படும்   ஒரு   நபரைக்  கைது   செய்திருப்பதாக   போலீஸ்   படைத்   தலைவர்   பூஸி  ஹருன்   கூறினார்.

சமூக  வலைத்தளங்களில்   வைரலான  ஒரு   கட்டுரை  தொடர்பாக    பெர்சத்துவான்  கெபாஜிகான்   இஸ்லாம்  டான்  டாக்வா   இஸ்லாமியா(பெகிடா) ,  சிலாங்கூர்   செய்த   புகாரை    அடுத்து    சனிக்கிழமை   அதிகாலை   மணி   4.40க்கு   அவர்   கைது    செய்யப்பட்டதாக   பூஸி   கூறினார்.

அக்கட்டுரையில்   மகாதிருக்கு   எதிர்ப்புத்   தெரிவித்த   ஒருவர்   அவரைச்  சுட்டுக்கொல்ல  விரும்புகிறார்  என்று கூறப்பட்டிருந்தது.

“கைது   செய்யப்பட்ட   நபர்    பொறுப்பற்ற   தரப்புகள்   தன்னுடைய   முகநூல்  கணக்கில்  ஊடுருவி   இருப்பதாகக்  கூறிக்கொண்டிருக்கிறார்”,  என  பூஸி   தெரிவித்தார்..