கேளிக்கை விடுதிக்கு வெளியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு, யாரும் காயமடையவில்லை

புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஓரு   கேளிக்கை   விடுதிக்கு   வெளியில்  சரமாரியான  துப்பாக்கிச்  சூட்டைக்   கேட்டு    விடுதியின்    வாடிக்கையாளர்களும்    பொதுமக்களும்     அதிர்ச்சி    அடைந்தனர்.

நேற்றிரவு    10.50 மணியளவில்   நடந்த     அச்சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  25  தடவை   துப்பாக்கிச் சூடுநடத்தியதாக   கோலாலும்பூர்   சிஐடி    தலைவர்   ருஷ்டி முகம்மட் இசா தெரிவித்தார்.  ஆனால்,  அச்சம்பவத்தில்   யாரும்  காயமடையவில்லை.

தொடக்கநிலை  விசாரணைகளில்   தொழில்தகராறு  காரணமாக  எச்சரிக்கை  விடுக்கும்  வகையிலேயே    அவர்கள்   துப்பாக்கிச்  சூடு   நடத்தியதாக   தெரிகிறது   என்றாரவர்.

சம்பவம்   நடந்தபோது   விடுதியின்   பணியாளர்கள்   நால்வர்   விடுதியின்  நுழைவாயிலுக்கு   வெளியில்   இருந்தனர்   என  ருஷ்டி    தெரிவித்தார்.

நுழைவாயிலுக்கு   வெளியில்   பொதுமக்களில்   ஒருவரும்   இருந்திருக்கிறார்.  அவர்  கார்  நிறுத்துமிடத்திலிருந்து   துப்பாக்கியால்    சுடும்   சத்தத்தைக்   கேட்டிருக்கிறார்.

சம்பவம்    நடந்த   இடத்தில்   25  காலி  துப்பாக்கி   தோட்டாக்களை  போலீசார்  கைப்பற்றினர்.