விஜயகலா விவகாரத்தின் எதிரொலி ! தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்த சிங்கள பேரினவாத தறுதலைகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை ,பாலியல் வன்புணர்வு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வொன்றின் போது தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .இதன் எதிரொலியாக சிங்கள பௌத்த பேரினவாத தறுதலைகள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் கொடும்பாவியை எரித்து வெறிச்செயல் புரிந்துள்ளார்கள் .

2009 வரை விடுதலை புலிகளின் ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டது என்றும் கொலைகள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; இடம்பெறவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் விஜயகலா தெரிவித்திருந்தார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறும் அட்டூழியங்களை ஒழிக்க வேண்டும் எனில் மீண்டும் விடுதலைப்புலிகளின் கரங்கள் ஓங்க வேண்டும் என்று விஜயகலா தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பூதாகரமாக வெடித்துள்ளது .இதன் எதிரொலியாக விஜயகலா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

-http://eelamnews.co.uk

TAGS: