விக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்

 

நாடாளுமன்ற செனட் சபையின் தலைவர் எஸ்எ விக்னேஸ்வரன் மஇகாவின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் இடத்தில் மஇகாவின் 10 ஆவது தலைவராகிறார் விக்னேஸ்வரன்.

மஇகா தலைவர் பதவிக்கு விக்னேஸ்வரன் 1,808 நியமனப் பத்திரங்களைப் பெற்றதாகவும், அப்பதவிக்கு வேறு வேட்பாளர் யாரும் இல்லாததால், விக்னேஸ்வரன் மஇகா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மஇகா தேர்தல் குழுவின் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் இன்று மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் அறிவித்தார்.