சைம் டர்பி தலைவராக ஸெட்டி நியமிக்கப்பட்டார்

சைம் டர்பி புரோப்பர்டி பெர்ஹாட், முன்னாள் மத்திய வங்கியின் கவர்னர் டாக்டர் ஸெட்டி அக்தர் அஜீசை இன்று புதியத் தலைவராக நியமித்தது.

தற்போது, பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட்-இன் (பி.என்.பி.) தலைவரான ஸெட்டி, கடந்த ஜூன் 30-இல் ஓய்வு பெற்ற அப்துல் வாஹிட் ஒமார்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சைம் டர்பி குழுவின் நிர்வாக இயக்குனர் அம்ரின் அவாலுடின், “ஸெட்டியின் தலைமையின் கீழ், எதிர்காலத்தில் இந்நிறுவனத்தை முன்னேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.