கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைகிறார்

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் சேரவிருக்கிறார். அது அந்த சட்டமன்றத்தில் ஒரு பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதித்துத்திற்கு வழி வகுக்கிறது.

பெர்சத்து வட்டாரத்தின்படி, அவருடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் அம்னோ கூட்டத்தினர் அவருடன் இருப்பார்கள்.

அச்சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைவதைக் கொண்டாடும் நிகழ்ச்சி மாச்சாங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மணி 1.00 அளவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்கிரிஷ் மகாதிர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பு கொண்ட போது, கிளந்தான் எதிரணித் தலைவர் முகமட் அல்வி செ அஹமட் அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

இதுவரையில், அம்னோ மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்து விட்டது – நூர் அஸ்மி கஸாலி (பாகன் செராய்), எர்மியாத்தி சம்சூடின் (மஸ்ஜிட் தானா) மற்றும் சைட் அபு ஹுசின் ஹபிஸ் சைட் அப்துல் ஃபாசால் (புக்கிட் காந்தாங்).

இம்மூவரும் நாடாளுமன்ற மக்களவையில் சுயேட்சைகள் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர்.

மே 9 பொதுத்தேர்தலில், ஹரப்பான் கூட்டணிக் கட்சி கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் ஒரு இருக்கையில்கூட மாநில மற்றும் நாடாளுமன்ற அளவில் வெற்றி பெறவில்லை.