ஹெலிகாப்டர் விபத்து- மலையேற்ற வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு?

தஜிகிஸ்தானில் மலைப்பகுதியில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டின் மிக உயரமான இஸ்மோலி சோமனி மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்ட 13 மலையேற்ற வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமிற்கு திரும்பினர். முகாமை நெருங்கியபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது அவசரமாக தரையிறக்க விமானி முயன்றுள்ளார். எனினும் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 மலையேற்ற வீரர்கள், 3 பைலட்டுகள் என அனைவரும் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த பகுதிக்கு மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

-athirvu.in