அலி ஹம்சா விலகிக் கொண்டார், இஸ்மாயில் பாகார் புதிய தலைமைச் செயலாளர்

 

அலி ஹம்சாவிற்கு பதிலாக கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பாகார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கிறார்.

2012 ஆன்டிலிருந்து அரசாங்கத் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த அலி தமது பதவியை இஸ்மாயிலிடம் ஒப்படைப்பதாக இன்று மதியம் டிவிட்டரில் பதவு செய்துள்ளார்.

இஸ்மாயில் 14 ஆவது அரசாங்கத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கிறார்.

ஆகஸ்ட் 29 இல் முடிவுறும் அலியின் சேவை ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படாது என்ற ஊகம் பரவியிருந்தது. ஆனால், முந்தைய நிருவாகம் அவரது 2015 ஆண்டு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 2020 வரையில் நீட்டித்தது. எனினும், மே 9 க்குப் பிறகு அதை நிர்ணயக்கும் பொறுப்பு பிரதமர் மகாதிரிடம் விடப்பட்டது.

இதனிடையே, இஸ்மாயில், 58, புதிய அரசாங்கத்தால் ஜூன் 13 இல் கருவூலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக அவர் நிதி அமைச்சின் பட்ஜெட் இயக்குனராக இருந்தார்.