ஏழைகளுக்கு மின்சார மானியம்: விரைவில் அறிவிப்பு

பரம ஏழைகளுக்குப் புதிய மின்சார நிதியுதவித் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கவிருப்பதாக எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், வானிலை மாற்றம், சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் இன்று கூறினார்.

“பரம ஏழைகளாக இருப்போருக்கு அடுத்த சில வாரங்களில் அரசாங்கம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவிக்கும்”, என்றாரவர் .

இத்திட்டத்தால் இ-காசேஇல் பதிவு செய்துகொண்டுள்ள 179,000 பேர் பயனடைவர் என இயோ தெரிவித்தார்.