மியான்மார் மீது விசாரணைகள் ஆரம்பம்

மியான்மார் இராணுவம், அதன் ராக்கைன் மாநிலத்தில் காணப்பட்ட றோகிஞ்சா மக்களை, பலவந்தப்படுத்தி, பங்களாதேஷுக்கு அனுப்பிவைத்தது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் ஒருவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான நிலைமைகள் குறித்து, முழுமையான முதற்கட்ட விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமெனவும், அதன் பின்னர், உத்தியோகபூர்வமான விசாரணைகளும் குற்றச்சாட்டுப் பதிவுகளும் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-tamilmirror.lk