13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா எம்எசிசியிலிருந்து வெளியேறினார்

 

கிட்டத்தட்ட 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் இன்றிரவு மணி 10.40 அளவில் ரோஸ்மா மன்சூர் எம்எசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.

ரோஸ்மா மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்பதை எம்எசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி நிராகரித்தார்.

களைப்படைந்து காணப்பட்ட ரோஸ்மா, “நான் ஓகே” என்று கூறினார்.