ஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 15 போலீசார் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 18–வது ஆண்டாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், உள்நாட்டு படைகளுக்கும் சண்டை நடந்து வருகிறது. தலீபான்களை ஒழிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படைகள் மட்டுமின்றி, அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் குஷ் ரதபா மாவட்டத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று தலீபான் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். அப்போது போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீசார் பலியாகினர். அதே நேரத்தில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 19 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

இதற்கு மத்தியில் கஜினி மாகாணத்திலும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

-dailythanthi.com