ஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம் வந்தார்

“என் நண்பருக்கு (அஹ்மட் ஜாஹிட்) ஆதரவு தெரிவிக்கவே நான் வந்தேன்,” என இன்று காலை நீதிமன்றம் வந்த முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக் கூறினார்.

காலை 9.17 மணிக்கு, அங்கு வந்த நஜிப், அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் வழக்கு விசாரணையைக் கவனிக்க, நேரடியாக கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார்.

ஏறக்குறைய 9.50 மணியளவில், நஜிப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா ஆகியோர், இன்று காலை ஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றம் வந்திருந்தனர்.

– பெர்னாமா