வாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு தீபக் சவால்

 

தாம் தொடர்ந்துள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய அவர்களுடைய வழக்குரைஞர்களுக்கு கட்டளையிடாமல், நீதிமன்றத்திற்கு வந்து தம்மை எதிர்கொள்ளும்படி நஜிப் ரசாக் மற்றும் ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு கம்பளி வணிகர் தீபக் ஜைகிஷான் சவால் விட்டுள்ளார்.

அத்தம்பதிகளுக்கு எதிராக தாம் தொடுத்துள்ள இரண்டு வழக்குகளுக்கும் தம்மிடம் போதுமான ஆவண மற்றும் ஆடியோ ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறிக்கொண்ட தீபக், எதிர்வரும் வாரங்களில் நஜிப்புக்கு எதிராக இன்னும் பல வழக்குகளைத் தொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய மனு செய்ய வேண்டாம் என்று உங்களுடைய (நஜிப் மற்றும் ரோஸ்மா) வழக்குரைஞர்களுக்குச் சொல்லுங்கள் என்றாரவர்.

“இப்போது நீங்கள் இருவரும் (நஜிப் மற்றும் ரோஸ்மா) நீதிமன்றங்களுக்கு அடிக்கடி வருகையளிப்பவர்களாக இருப்பதால், வாருங்கள், நீதிமன்றத்தில் போட்டுப் பார்த்து விடுவோம்”, என்று தீபக் மலேசியாகினியிடம் கூறினார்.