அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி

2019 வரவு செலவு திட்டம் | அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி வழங்கவுள்ளதாக, 2019 வரவு செலவு திட்டத் தாக்கலின் போது, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டும் பொறுப்புணர்வுக்கு நன்றி கூறும் வகையில், கிரேட் 54 மற்றும் அதற்கும் கீழே உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், RM500 விசேட நிதியை லிம் அறிவித்தார்.

பணி ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு, சிறப்பு நிதியாக RM250 வழங்கப்படும். இந்தச் சிறப்பு நிதிக்காக, RM1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

முந்தைய அரசாங்கத்தைப் போல, இச்சிறப்பு நிதியை அடுத்த வருடம் வழங்காமல், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 2018 இறுதிக்குள் இந்நிதியை வழங்கும் என்றும் அவர் கூறினார்.