கட்சியைக் கலைக்க வேண்டும், 16 அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

குறிப்பிட்ட காலவரைக்குள் கிளை மற்றும் தொகுதி தேர்தல்களை நடத்தத் தவறியதால், அம்னோவைக் கலைக்க வேண்டும் எனும் 16 அம்னோ உறுப்பினர்களின் முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

டாக்டர் படாரியா சாகமித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது.

14-வது பொதுத் தேர்தலுக்குப்பின், அம்னோ கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கான கட்சித் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான நீட்டிப்பை அனுமதித்த சங்கங்களின் பதிவாளர் (ரோஸ்) முடிவுக்கு எதிராக, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, நீதிமன்ற மறுஆய்வு மனுவை 16 அம்னோ உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர்.

ஏப்ரல் 26-ம் திகதி, கட்சிப் பிரச்சனைகளை அதன் உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரக் கூடாது எனும் அமைப்புகள் சட்டம் பிரிவு 18C-க்கு இணங்க, உயர் நீதிமன்றம் அவர்கள் விண்ணப்பத்தை நிராகரித்தது.