கோபிந்த்: புதிய ஃபினாஸ் வாரியம் நியமனம்

தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக(ஃபினாஸ்)துக்குப் புதிய இயக்குனர் வாரியம் அமைக்கப்பட்டிருப்பதாக இன்று தெரிவித்தார். வாரிய உறுப்பினர்கள் அடுத்த வாரம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள்.

இயக்குனர் வாரியத்துக்கு நிதி மற்றும் நிறுவனத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

“அதேவேளை இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் அடங்கிய ஆலோசகர் குழு ஒன்றையும் அமைக்க விருக்கிறோம். இத்துறையின் பிரச்னைகளை அறிந்த அவர்கள் நடப்புப் பிரச்னைகளைக் களைய எங்களுக்கு உதவியாக இருப்பார்கள்”, என்றார்.

ஆலோசகர் குழு ஃபினாஸ் புதிய தலைமைச் செயலாளர் நியமனத்திலும் அமைச்சுக்கு ஆலோசனை கூறும் என்று கோபிந்த் சொன்னார்.

“அடுத்த வாரம் செய்தியாளர் கூட்டம் நடத்தி அதில் இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” , என்றாரவர்.