ஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 10 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் என்ற இடத்தில் தலிபான்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதியான மாவ்லாலி நஸ்ரத்துல்லா உள்பட 10 பயங்கரவாதிகள்

கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-athirvu.in