இலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை!

அர­சியல் நெருக்­க­டி­களால், இலங்­கைக்கு கடன் வழங்க இணங்­கிய பல சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், தமது முடிவு­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தற்­போ­தைய அர­சியல் இழு­ப­றி களால், சட்­ட­ரீ­தி­யான அர­சாங்கம் தொடர்­பான கேள்­விகள் எழுந்­துள்ள காரணத்தாலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அர­சாங்கம் வரும் ஜன­வரி தொடக்கம் ஏப்ரல் மாதத்­துக்­கி­டையில், 1.5 பில்­லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்­டிய நிலையில் உள்­ளது. இதில் 1 பில்­லியன் டொலர் வரும் ஜன­வரி 15ஆம் திகதி செலுத்­தப்­பட வேண்டும். இதற்­காக, சீன அபி­வி­ருத்தி வங்­கி­யிடம் 500 மில்­லியன் டொலரை கட­னாக பெறு­வ­தற்­கான பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

இதனால் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு வெளி­யாகும் வரை, தமது கடன்கள் தொடர்­பான முடி­வு­களை எடுப்­பதை சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், நிறுத்தி வைத்­துள்­ளன.

ஆனால், அர­சாங்­கத்தின் சட்­ட­பூர்வ தன்மை தொடர்­பான இழு­ப­றி­யினால், இந்தக் கடனை சீன அபி­வி­ருத்தி வங்கி நிறுத்தி வைத்­துள்­ளது. ஏற்­க­னவே சீன அபி­வி­ருத்தி வங்­கி­யிலும் இலங்கை அர­சாங்கம் 1 பில்­லியன் டொலரை கட­னாக பெற்­றுள்­ளது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: