மாசிடோனியா பெயர் மாற்றத்தால் கிரீஸில் வெடித்த மோதல்

மாசிடோனியாவின் பெயரை மாற்றும் கிரீஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் போலீஸாருடன் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரில் சிலர் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

இன்னும் ஒப்புதல் பெறப்படாத இந்த உடன்படிக்கையின்படி, கிரீஸின் வட அண்டை நாடான மாசிடோனியா இனி வடக்கு மாசிடோனியா என அழைக்கப்படும்.

கிரீஸ் நாட்டை சேர்ந்த பலருக்கு மாசிடோனியா என்ற பெயர் மிகவும் உணர்வுபூர்வமானது. -BBC_Tamil