புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த இளைஞர் சரணடைவு

அமெரிக்காவின் புளோரிடாவின் செப்ரிங் பகுதியில் உள்ள சன் டிரஸ்ட் என்ற வங்கியில் புதன்கிழமை உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த 21 வயதாகும் ஷெபென் ஷேவர் என்ற இளைஞர் தொலைபேசியில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தானாகவே சென்று போலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

பகல் 12:30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தின் பின்னணி என்னவென்பது குறித்து இதுவரை போலிசார் தகவல் அளிக்கவில்லை. ஆயினும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்ட போது கொல்லப் பட்ட ஐவர் மாத்திரமே உள்ளேயிருந்துள்ளனர்.

-4tamilmedia.com