காலில்: இனி வரும் தேர்தல்களில் பாஸ் அம்னோவை எதிர்க்காது

செமிஞ்யே தேர்தல்| இனி வரும் தேர்தல்களில் பாஸும் அம்னோவும் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடுவதைத் தவிர்க்கும். அதற்காக இரண்டும் ஒரு கூட்டுக் குழுவை அமைக்கவுள்ளன.

நேற்றிரவு, ஒரு செராமாவில் பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடி இதைத் தெரிவித்தார்.

“வரும் தேர்தல்களில் மும்முனைப் போட்டி இருக்காது. எல்லாம் நேரடிப் போட்டிதான். இதை நினைத்துதான் பக்கத்தான் ஹரப்பான் பயப்படுகிறது”, என்றாரவர்.

நேரடித் தேர்தல் என்றால் புத்ரா ஜெயாவில் உள்ள இப்போதைய அரசாங்கமும் சிலாங்கூரும் கவிழும் என்று காலில் கூறிக்கொண்டார்.