நேபாளத்தில் புயல்மழை: 30 பேர் பலி; 400 பேர் காயம்

காத்மாண்டு : நேபாளத்தில் புயல், மழை காரணமாக 30 பேர் பலியாயினர். 400 பேர் காயமுற்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்குநேபாள் பாரா மாவட்டத்தில் பெய்த பேய் மழைக்கு 30 பேர் பலியாகியுள்ளனர். காயமுற்ற 400க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள பிர்குஞ்ச் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மழையால் பல இடங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

காற்றில் பறந்தன

பலத்த காற்று காரணமாக முறிந்த மரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் காற்றில் பறந்து சென்று பலரை தாக்கியது. இதன்காரணமாகத்தான் உயிரிழப்பு அதிகரித்தது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பல கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும்.

-dinamalar.com