காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி!

சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உடல் கருகி பலியாகினர்.

தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த பணியில் 100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். நேற்று மதியம் வரை, அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த 30 தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது. நேற்று அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று 2 தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளது.

-athirvu.in