கடன் வாங்கியவர்களைக் கருப்புப் பட்டியலிட்டால் பிடிபிடிஎன் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரும்

உயர்க் கல்விக் கடனுதவிக் கழகம் (பிடிபிடிஎன்), கடனைத் திருப்பிக் கொடுக்காதவர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க நினைத்தால் அது மக்களின் கோபத்துக்கு உள்ளாகும் என மாணவப் போராட்டவாதி அஷீக் ச்லி சேதி அலிவி எச்சரித்துள்ளார்.

“அப்படிப்பட்ட ஆலோசனையே பிடிபிடிஎன், பணம் பிடுங்கும் முதலையோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

“பிடிபிடின் அந்த ஆலோசனையைத் தொடருமானால் மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்”, என்றாரவர்.