இரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் – என்ன நடக்கிறது?

இரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை செளதிக்கு விற்க அனுமதி தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவ்வாறாக ஆயுதம் விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.

ஆனால், இரான் விவகாரத்தை காரணம் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுகிறது. நேரடியாக ட்ரம்பே இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இதற்கு சில ஜனநாயகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இரான் பதற்றம்:செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் - என்ன நடக்கிறது?

அதுபோல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்படும் என கூறி உள்ளார். ஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.

எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக இரானை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.

-BBC_Tamil