“செத்துத் தொலையுங்கள்” என்று கத்தியபடி தீ வைத்த நபர்!

செத்துத் தொலையுங்கள் என்று கத்தியபடி ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து ஒருவர் தீ வைத்ததில் 33 பேர் பலியாயினர்.

மேலும் 35 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீவைத்த 41 வயது நபரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-https://athirvu.in