பணி ஓய்வு வயதை உயர்த்தலாமா என்று அரசாங்கம் ஆராயும்

அரசாங்கம் அதன் பணியாளர்களின் ஓய்வு வயதை, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் உள்ளதுபோல், 60-இலிருந்து 65ஆக உயர்த்தலாமா என்று ஆராயும்.

இவ்விவகாரத்தில் நிதி அமைச்சுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

“ இவ்விவகாரத்தை நிதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். கூடவே எங்கள் கருத்தையும் தெரிவித்திருக்கிறோம். அத்துடன் வாழ்க்கைச் செலவினப் படியை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்”, என்றாரவர்.