ஐஎஸ்-தொடர்பு உள்ள 16பேர் கைது

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்-உடன் தொடர்புள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 16 பேரை போலீஸ் தடுத்து வைத்துள்ளது.

அவர்களில் 12பேர் இந்தோனேசியர், மூவர் மலேசியர், ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவு-பயங்கரவாதம் (இ8) தலைமை உதவி இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

அவர்கள் சாபா, பகாங், பினாங்கு, சிலாங்கூர், கோலாலும்பூர் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

“அச்சந்தேகப் பேர்வழிகள் ஆகஸ்ட் 10-இல் தொடங்கி நேற்று முடிவுக்கு வந்த ஒரு சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்”, என்று அவர் புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-பெர்னாமா